கணிசமானதமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

354 0

 கேள்வி:- தற்போதையநிலையில்,வருகின்றபாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- நல்லகேள்வி. இப்போதிருக்கும் பிரதிநிதிகள் சேர்ந்து இதுவரையில் உருப்படியான நடவடிக்கைகள்  ஏதும் எடுக்காதநிலையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள். ஆனால்,நீங்கள் மூன்றுகேள்விகளை ஓரே கேள்வியில் உள்ளடக்கியுள்ளீர்கள் போல் தெரிகின்றது.

அவையாவன

1. வருகின்ற தேர்தலில் ஒரேகொள்கையுடைய கணிசமானதமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

2. அப்படி இல்லைஎன்றால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களினால்சேர்ந்;து ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கமுடியுமா?

3. அப்படிஎடுக்கமுடியாவிட்டால் இப்பொழுதிருந்தேநீங்கள் வருகின்றதேர்தலை எப்;படிமுகம் கொடுக்கஉத்தேசித்துள்ளீர்கள்?

இவற்றைப் பரிசீலித்துப் பார்ப்போம்!

தற்போதையநிலையில் வருந்தேர்தலில் தமிழ் மக்கட் பிரதிநிதிகளிடையேகொள்கைசார் ஒற்றுமைக்குப் பதில் பிரிந்தமனப்பாங்கேமேலோங்கிநிற்கும் சாத்தியக் கூறுகள்தென்படுகின்றன. உண்மையில் நான் வலிந்து ஒருசாராரை கொள்கை ரீதியாகஎம்முடன் சேருமாறு கூறிபணிந்து சென்றமை இவ்வாறானஒருநிலைமைவருந் தேர்தலில் ஏற்படக்கூடும் என்பதாலேயே. ஆனால்,சுயநலம் வென்றுவிட்டது. பொதுநலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஒரே கொள்கையுடையோர் சேராதுபோனது, இதுவரைகாலமும் கொள்கையைமுன்வைத்துவாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு.ஒருவ ரப்பிரசாதமாகஅமையும் என்றுஅந்தக் கொள்கை மறந்தவர்கள் நினைக்கலாம். ஆனால்,எமது மக்கள் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடும்.

பாராளுமன்றத்திற்கு உள்ளே இது வரைகாலமும்  விடப்படாத கட்சிகளுக்கும் (அவ்வாறு அழைக்கப்படும்)  தேசியக் கட்சிகளுக்கும் தமது வாக்கு களைப் பகிர்ந்து கொடுத்து மிக அபாயகரமான ஒருநிலையைஏற்படுத்தம் விதத்தில் அவர்கள் சிந்திக்கக்கூடும். குறித்ததேசியக் கட்சிகளும் அவற்றின்பால் சார் கட்சிகளும் தலையெடுத்தால் எமதுநிலை தற்போதையநிலைக்கும் பார்க்கமிகவும் பரிதாபகரமானநிலையைஅடையும். வடமாகாணத்தில் தேசியக் கட்சிகளில்; இருந்தும் அவற்றைச் சார்ந்தகட்சிகளில் இருந்துந்தெரிபடப் போகின்றவர்கள் தமிழரே. அந்தவகையில் ஆறுதல் கொள்ளநினைத்தாலும் கிழக்கில் தமிழர் அல்லாதோரேபெரும்பான்மையாகத்தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பின் வடக்கிலும் கிழக்கிலும் பணம் எடுத்துவேலைகொடுக்கும் படலங்களும் தென்னவர்களின் கூடிய முதலீடுகளும், வைத்தியசாலைகள்,பாடசாலைகள்,அரசாங்கதிணைக்களங்கள் போன்றவற்றில் கூடியபெரும்பான்மையினர் உள்ளடக்கங்களும் நடைபெறுவன.

அவற்றைத்தேசியக் கட்சிகளும் அவற்றின் சார்ப்புக் கட்சிகளும் தடுக்கமுடியாமல் போய்விடும். அவர்கள் வடக்கில் தமிழர்கள் என்றாலும் கிழக்கில் பல் இனத்தவர். அவர்கள் யாவரும்அவர்களின் கட்சியின் தலைமைத்துவத்திற்குக்கட்டுப்பட்டே ஆக வேண்டும். அடம் பிடித்;தால் பெரும்பான்மையினத் தலைவர்கள் மூலையில் இருத்திவிடுவார்கள்;.

ஜனாதிபதி சிறிசேன பதவிக்குவந்ததுதமிழ்ப்பேசும் மக்களின் வாக்கினால். இதுவரைஅவர் எமதுதமிழ் மக்களுக்கான எந்தக் கோரிக்கையையும்நிறைவேற்றியுள்ளாரா? மத்தியஅரசாங்கம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளையேஅவர் நடைமுறைப்படுத்திவந்துள்ளார். அதேபோல் எமதுதேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களும் அவை சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்குமுண்டுகொடுக்கவேயன்றிதமிழர்தம் நியாயமானகோரிக்கைகளை நடைமுறைப்படுத்த இலாயக்கற்றவர்களாகவே இருப்பர். ஆகவே,தமிழரின் வருங்காலம்சார் கொள்கையில்; ஒருமைத்துவம் கொண்டமக்கட் பிரதிநிதிகள் கணிசமானவர்கள் இனிவரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதன் அவசியத்தைநான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்களாஎன்றால் தற்போதையநிலையில் ஒருவிதமயக்கநிலைதான் காணப்படுகின்றது. அப்படி தேர்ந்தெடுக்கப்படாமல் பலவிதமானவேறுவேறுகட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அவர்கள் உருப்படியாகஎதனைசெய்யமுடியும் என்பதுஉங்கள் கேள்விக்குள் இருக்கும் மறு கேள்வி. அவ்வாறுகுறிக்கப்படும் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம் மக்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கலாம்.

ஆனால்,எமதுவருங்காலம் கவலைக்கிடமாகப் போய்விடும். அதாவது,அரசியல் ரீதியாகஎதுவும் எம்மக்களுக்குக்; கொடுக்கப்படமாட்டா. எவ்வாறுகுறைபாடுகள் நிறைந்த 13ஆவது திருத்தச் சட்டம் 1992 இல் மேலும் குறைபாடு அடையமத்தியஅரசாங்கத்தால் வழி அமைக்கப்பட்டதோ அதேவாறு மாகாண சபைகளுக்குஇருக்கும் குறைவான உரித்துக்களும்மேலும் மேலும்பறிபோய்விடுவன. மத்தியின் ஆதிக்கம் வலுப்பெறும். தமிழர் தம் வருங்காலம் கவலைக்கிடமாகும்.

அடுத்தவிடயம் நாங்கள் இப்போதிருந்து இவ்வாறானநிலையைத் தடுக்கஎன்னசெய்யப்போகின்றோம் என்பது. அடுத்ததேர்தலுக்குமுன்னர் சிலநடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுஎனதுகருத்து. அதாவது தற்போதிருக்கும் அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநித்துவம் கணிசமானது. அதன் தலைவர்களின் பேச்சுக்கள் அண்மைக்காலமாகநாம் இதுகாறும் வலியுறுத்திவந்தவற்றைப் பிரதிபலிப்பனவாகத் தென்படுகின்றன. உதாரணத்திற்கு அண்மையில் ஒருவர் தமிழர்கள்; வெறும் பொருளாதாரநன்மைகள் பெறுவதால் எமதுஅரசியல் ரீதியானகோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுபோய் விடும் என்றகருத்தைமுன் வைத்துள்ளார். அவ்வாறானசிந்தனைகள் வரவேற்கத்தக்கன. அவற்றின்நீட்சியாகதற்போதுபாராளுமன்றத்தில் வலுவானபிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள்  ஏன் எமது தொகையினரைவைத்து சிலபலகாரியங்களைஇயற்றமுடியாதுஎன்றகேள்விஎழுகின்றது.

அண்மையில் பதவியில் உள்ளவர்கள் சார்பில் எமக்குஎன்னவேண்டும் என்றுதொலைபேசியில் என்னிடம் கேட்கப்பட்டது.பேசியவர் எனதுநண்பர். பதவியில் உள்ளவர் சார்பில் பேசினார்.நான் எனக்குதனிப்பட்டரீதியில் ஒன்றுந்தேவையில்லை. முடியுமானால் அடுத்தபௌர்ணமிதினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்புவழங்குங்கள் என்றேன். என்னுடன் கதைத்த இடைத்தரகர் இதுபற்றிஉரியவர்களுடன் பேசிபதில் தருவதாகக் கூறினார்.

இதிலிருந்துபதவியில் உள்ளவர்கள் விரைவில் தமக்குஎன்னநடக்குமோஎன்றபீதியில் உள்ளார்கள் என்று தெரியவருகின்றது.  தற்போதிருக்கும் பாராளுமன்றம் இன்னும் சிலமாதங்கள்நீடிக்கப்போகும் நிலையில் எமதுமக்களுக்குத் தேவையானபலவற்றை ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சேர்ந்துஅரசாங்கத்துடன் பேரம் பேசிபெற்றுக்கொள்ளக்கூடாதுஎன்றகருத்தைமுன் வைக்கின்றேன். தற்போதிருக்கும் 16 பேரைக் கொண்டதொருதமிழர் சார் கட்சியின் அங்கத்தவர்களாகஎமதுபிரதிநிதிகள் வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படமுடியாதென்றால் ஏன் அவர்கள் இப்போதிருந்தே அரசாங்கத்தை நெருக்கிஒருசிலவற்றையேனும்; பெறமுடியாதுஎன்றகேள்விஎழுகின்றது.

கல்முனையில் தோல்வியடைந்தவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வியடையும் என்றுஎதிர்பார்க்காமல் தற்போதுசேர்ந்திருக்கும் எம்மவர் எம து மக்களுக்கான மிக அவசரமான பலவிடயங்களைஅரசாங்கத்திடம் இருந்துபெற்றுக் கொள்ளவேண்டும்.

உங்கள் கேள்விக்கும் பதில் இதுதான். அதாவது,தற்போதையநிலையில் அவ்வாறானதொரு பலமற்ற நிலைஎழக்கூடும் என்றுதோன்றினாலும் எம் மக்களின் நலன் சார்பாகநாமெல்லோரும் இப்பொழு திருந்தே சிந்திக்கத் தொடங்கினோமானால்  வருங்காலத்தில் உருப்படியாகமக்கள் சார் நடவடிக்கைகளைஎடுக்கமுடியும் என்றே கருதுகின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
ஸ்தாபகரும் செயலாளர் நாயகமும்
தமிழ் மக்கள் கூட்டணி
02.08.2019