இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

220 0

பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 7.30 மணி அளவில் மத்தோகொட பகுதியில் வேன் ஒன்றை திருடிச் சென்றமை தொடர்பில் குறித்த வேன் உரிமையாளர் மத்தோகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்திருந்தார்.

இதன்பின்னர் திருடப்பட்ட வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜீ.பி.எஸ். உபகரணத்தின் அடிப்படையாகக் கொண்டு  பொலிஸார் வேனை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

வாத்துவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த வேனை வீதி தடையில் நிறுத்த முற்பட்டபோது அந்த வேனில் பயணித்தவர்கள் இராணுவத்தினர் இருவரையும் மோதிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதன்பின்னர் வலான குற்றத்தடுப்பு பிரிவினர் பாணந்துறை பகுதியில் வைத்து குறித்த வேனை மடக்கிப் பிடித்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் இருவரும் வேனை விட்டு இறங்கி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே தப்பிச் செல்ல முற்பட்ட இருபர் மீது இராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னரே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் தப்பிச் சென்ற சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.