அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறைக்காக முதலாம் திகதி மூடப்படும் மேற்படி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.