நாட்டில் இப்போது குடும்ப ஆட்டம் முற்றுப் பெற்று விட்டது-பாட்டளி

280 0

நாட்டில் இப்போது தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லையெனவும், குடும்ப ஆட்டமும் முற்றுப் பெற்று விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி வேட்பாளராக தங்களது பெயரும் இடம்பெறுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போது இருப்பது ஒரே நாட்டுக்கான ஆட்டம் எனவும் ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்குப் பதிலாக நாட்டு மக்கள் அனைவரையும் ஜனாதிபதியாக்கவே நாம் முனைகின்றோம் எனவும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.