தேசியத் தலைவர் பிரபாகரனின் விட்டுக் கொடுப்பும் நல்லென்னணமும் சகலரிடமும் இருக்க வேண்டும்!

364 0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வர வேண்டுமெனத் தெரிவித்த மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தவைலருமான அனந்தி சசிதரன், ஈபிஆர்எல்எப் வந்தால் தாம் வரமாட்டோம் என்ற முன்னணியின் நிலைப்பாட்டை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் குற்றங்கள் காணுவதாக இருந்தால், அனைத்துக் கட்சிகள் மீதும் குற்றஞ்களைக் கண்டுகொண்டே இருக்கலாமென்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தினார்.

தேசியத் தலைவர் பிரபாகரனின் விட்டுக் கொடுப்பும் நல்லென்னணமும் சகலரிடமும் இருக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.