வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை

292 0

கரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை  சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம்மாதம் 26 ஆம் திகதி அரச வர்த்தகமாணி வெளியீட்டில் 8ம் வட்டாரமும் நெல்லியடிக் கிராம அலுவலர் பிரிவு ஜே./376 இல் ஏழாவது வீதியாக செட்டித்துறை வீதி காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஐ.நடேசன் இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றியதுடன் நாடறிந்த தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றினார். அமரர் ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில் 2014 ஆம்ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி கிழக்கில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இவரது வரலாறு எமது அடுத்ததலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவரின் பெயரை 250 மீற்றர் நீளமான மேற்படி வீதிக்கு சூட்டுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.