ரயிலுடன் ஜீப் வண்டி மோதி விபத்து

243 0

ஹபரண, சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று  மதியம் இடம்பெற்றுள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜீப் வண்டி ஹபரண, பளுகஸ்வெவ கல்கடவெலப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தியில் ஹபரண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர் ஒருவர் உட்பட மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், ஹபரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.