தமிழரின் அரசியல் தீர்வை தீயிட்டு கொழுத்திய ஐ.தே.க தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றது!

281 0

தமிழரின் அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க முன்வைத்த பிரேரணையை தீயிட்டு கொழுத்திய ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது  தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து கவனம் செலுத்துவது வேடிக்கையாகவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

 

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராகவெ கறுப்பு ஜுலை  இனக் கலவரம் தோற்றம் பெற்றது. இதற்கு  தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கிய தரப்பினர்கள்  நிச்சயம் பொறுப்பு  கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாயலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.