சரணடைந்த பெலியத்த பிரதேச சபை தலைவருக்கு பிணை

321 0

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவை சேர்ந்த பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில் முணசிங்க 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 18 ஆம் திகதி பெலியத்த பிரதேச சபையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சரத் லொகுகுருகேவை தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரதேசபை தலைவர் இன்று திங்கட்கிழமை பெலியத்தை பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொலிஸார் சந்தேக நபரை தங்கல்ல நீதிதிவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தி போது நீதிவான் பிரதேச சபை தலைவரை  2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவித்தார்.