அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!

290 0

அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வந்த நிலையில் குறித்த அவரச காலச் சட்டம் இன்று மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.