நீராட சென்ற மாணவன் ஒருவன் மாயம்

239 0

களுத்தறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செபஸ்தியன் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்னால் உள்ள கடற்கரைப் பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.

நேற்று (21) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 மாணவர்கள் நீராட சென்றுள்ளதுடன் அதில் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மதுரகே சசிது மல்ஷான் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.