சிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் – கலகொடே

363 0

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டில் இருந்து முழுமையாக துடைத்தெறிய வேண்டுமாயின் பௌத்த பிக்குகள் அரசியல் பேதங்களை துறந்து பௌத்த சாசனத்திற்கு அமைய ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அத்துடன் பௌத்த மதத்தின் மரபுரிமைகளும், கோட்பாடுகளும்  பாதுகாப்பப்பட வேண்டுமாயின் சிங்கள இளம் தலைமுறையினர் அனைவரும் பௌத்த மதத்தினை முழுமையாக  முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கலென்பிந்துனுவெவ  பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்துக கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பௌத்த நாட்டின் மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் காலத்தில் எவ்வளவு நிதி சேமித்துக் கொள்ளலாம் என்று மாத்திரமே நினைக்கின்றார்களே தவிர  நாடு தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்வது கிடையாது.  தற்போது நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு பௌத்த மத பிக்குகளினால் மாத்திரமே தீர்வு வழங்க  முடியும். அரசியல்வாதிகள்  தயவு செய்து விலகிக்கொள்ள வேண்டும்.

பௌத்த மத சாசனத்திற்கு அமைய அனைத்து பிக்குகளும் அரசியல் பேதங்களை துறந்து  ஒன்றுப்பட வேண்டும். சிங்கள இளைஞர்களின்  கைகளிலே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.