இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி ; 8 பேர் காயம்

480 0

முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் பயணித்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5 பேர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.