ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்டில் அறிவிப்பு

519 0

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்பாளர் மற்றும்  அக்கட்­சியைப் பிர­தா­ன­மாகக் கொண்ட புதுக் கூட்­ட­மைப்பு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவிக்க ஐ.தே.க. தீர்­மானித்­துள்­ளது.

நேற்று அலரி மாளி­கையில்  ஐ.தே.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­க­ளுடன்  இடம்­பெற்ற விஷேட  கலந்­து­ரை­யா­டலை அடுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.தே.மு.வின் கூட்டுக் கட்­சி­களின் கூட்டம் நேற்று அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது. இதில்  ஐ.தே.க.வை பிரதிநிதித்­துவம் செய்து,  அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, ராஜித்த சேனா­ரத்ன, அகில விராஜ் காரி­ய­வசம்,  மலிக் சம­ர­விக்­ரம மற்றும் மங்­கள சம­ர­வீர ஆகியோர் பங்­கேற்­றனர்.

ஐ.தே.மு.  கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கூட்­டணிக் கட்­சிகள் சார்பில்,   தமிழர் முற்­போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்­பரம்,  அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க,  மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன்  ஆகியோர் பங்­கேற்­றனர்.

இதன்­போது நடப்பு அர­சியல் விவ­காரம் மற்றும் நாட்டு நிலைமை தொடர்பில் விரி­வாக ஆராயப்பட்­டுள்­ளது. இதன்­போதே  எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் அமைக்­கப்ப­ட­வுள்ள பரந்த பொதுக் கூட்­ட­மைப்பு தொடர்பில் நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அதன் சின்னம்,  ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே பொதுக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பது என முடி வெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.