கொலைச் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது

288 0

எல்பிட்டிய, அநுருத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 30ம் திகதி 42 வயதுடைய ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்துள்ளனர்.

37 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.