கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

283 0

பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 145 கிலோ கிராம் கேரளா கஞ்சா, காங்கேசன்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி, பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வைத்து குறித்த நபர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பொதி செய்யப்பட்ட நிலையில், கஞ்சா பொதிகளை எடுத்துச் சென்ற போதே, பொலிஸார் மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.

இதன் போது கஞ்சா மீட்கப்பட்டதுடன், 27 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றையவர் தப்பி ஓடியதால், மற்றைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.