போதை மாத்­தி­ரைகளுடன் ஒருவர் கைது

365 0

கல்­கிஸை பிர­தே­சத்தில் மத்­திய தபால் பரி­வர்த்­தனை நிலைய அதி­கா­ரி­களால் ரூபா 27 மில்­லி­ய­னுக்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய போதை மாத்­தி­ரை­க­ளுடன் சந்­தே­க­ந­ப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்று வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தே­க­நபர் 57 வய­து­டைய கல்­கிஸை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் என்று சுங்க ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

மிகவும் சூட்­சு­ம­மான முறையில் ஒலி­பெ­ருக்­கிக்குள் மறைத்து பெல்­ஜி­யத்­தி­லி­ருந்து தபால் பொதி சேவை­யூ­டாக இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட போதே இப் போதை மாத்­தி­ரைகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இதில் சுமார் 5500 போதை மாத்­தி­ரைகள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு, அவற்றின் பெறு­மதி 27.5 மில்­லியன் ரூபா என்று சுங்க ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. அதே­வேளை சந்­தேகநபர் போதை­மாத்­தி­ரைகள் அடங்­கிய ஒலிப்­பெ­ருக்­கியை எடுத்துச் செல்லும் நோக்­குடன் மத்­திய தபால் பரி­வர்த்­தனை நிலை­யத்­திற்கு வந்­தி­ருந்த போதே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவர் தொடர்­பான மேலதிக விசாரணைகளை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தினருடன் இணைந்து சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.