சகல முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்க இயலாது – ஹக்கீம்

367 0

தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில்  ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியதாகும். இந்த  தாக்குதல்களுக்கு  காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள  முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

தற்போது எமது நாடு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.  இத்தகையதொரு நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான  கருத்துக்கள்  முன்வைக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களை மேற்கொண்ட குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள்  என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள  முடியாது.  இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் பெரும்  துயர்  மிக்கதாக  அமையப்பெற்றிருந்து.

ஒருமித்த கொள்கையொன்றை  உருவாக்க வேண்டுமானால்  மீண்டும் இன, மத ரீதியான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு  இடமளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.