இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

404 0

ஊர்காவற்துறை பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 4 பேர்களை நேற்று (27) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து, யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

கடல்வழி மார்க்கமாக வந்த சுற்றிவளைப்பின் இவர்கள் கைது செய்துள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இராமேஸ்வரத்தினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்களிடம் இருந்து ஒரு விசைப் படகுகளும், ஏனைய உடமைகளும் அரசயுடமையாக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த மீனவர்களை யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆயராகிய போது இவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் உத்தரவிட்டார்.