கடு­வலை – கொழும்புக்கிடையில் புதிய புகையிரதப் பாதை அமைக்கத் திட்டம்

409 0

கடு­வலை­யி­லி­ருந்து  கொழும்பு நகர் வரை­யி­லான புகை­யி­ர­த­ப்  பா­தையை அமைக்கும் பணி­களை   பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தலை­மையில்  ஜூலை 03ஆம்  திகதி  ஆரம்­பித்து  வைக்­க­வுள்­ள­தாக  பாரிய நகரம்  மற்றும்  மேல்­மா­காண  அபி­வி­ருத்தி  அமைச்சர்  சம்­பிக்க  ரண­வக்க  தெரி­வித்தார்.

பாணந்­து­றையில்  நேற்று  புதன்­கி­ழமை இடம் பெற்ற  நிகழ்­வொன்றில்  கலந்து  கொண்டு  உரை­யாற்­றிய  அமைச்சர்  ரண­வக்க மேலும்   கூறி­ய­தா­வது,

கடந்த  ஆட்­சி­யா­ளர்கள்  அதி­வேக  வீதி   ,  விமான நிலைய ங்கள்  மேம்­பா­லங்கள் ஆகி­ய­வற்றின்  நிர்­மா­ணப்­ப­ணி­களில்  அதிக  ஈடு­பாட்­டுடன்  செய்ற்­பட்­ட­துடன்.  ,  அதற்­காக  அதி­க­ள­வி­லான  நிதி­யையும்  செல­விட்­டனர். இருந்த  போதிலும்  அந்த  திட்­டங்கள் சரி­யான  முறையில்  மக்­களை  சென்­ற­டை­ய­வில்லை .அப்­போ­தைய  ஆட்­சி­யா­ளர்கள்   தமது  சுய­லா­பத்­திற்­கா­கவும் ,தற்­பு­கழ்ச்­சிக்­கா­க­வுமே  இவ்­வா­றாக  வீதி அபி­வி­ருத்தி  திட்­டங்­க­ளுக்கு  முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளனர்.

மக்கள்  தாம்  சேக­ரித்த  பணத்தை செல­விட்டு  கொள்­வ­னவு  செய்யும்  வாக­னங்­களில்  ,  நிம்­ம­தி­யாக  பய­ணிக்க  இய­லாத  நிலையே  காணப்­ப­டு­கின்­றது. வாகன நெரி­சலும்  , கால­தா­ம­தமும் அதி­க­ரித்த  மட்­டத்தில்  காணப்­ப­டு­கின்­றது.  இத்­த­கைய  போக்­கு­வ­ரத்து  தொடர்­பான  பிரச்­சி­னை­களை  நிவர்த்தி  செய்து கொள்­வ­தற்­காக   பாரிய  நகர  மற்றும்  மேல்­மா­காண  அபி­வி­ருத்தி  அமைச்­சி­னூ­டாக  புதிய  திட்­டங்­களை  நடை­மு­றைப்­ப­டுத்த  தீர்­மா­னித்­துள்ளோம்.

அதற்­க­மைய பொது போக்­கு­வ­ரத்த  சேவைக்­காக  பயன்­ப­டுத்­தப்­படும்  பஸ் மற்றும்  புகை­யி­ரத போக்­கு­வ­ரத்தை   பலப்­ப­டுத்­து­வ­தற்­கான  திட்­டங்­களை  முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

ஒவ்­வா­ரு­வரும்  தனிப்­பட்ட  வாக­னத்தில்  பய­ணிப்­ப­தனால்  பெரு­ம­ளவில்  வாகன  நெரிசல்   மற்றும்  கால­தா­மதம்  என்­பன  ஏற்­ப­டு­கின்­றன.  மாறாக  பொது­வா­க­னங்­க­ளான  பஸ்  மற்றும்  புகை­யி­ரத  சேவையை  பயன்­ப­டுத்­து­வ­த­னூ­டாக   இந்த நிலை­மையை  தவிர்த்­துக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக   இருக்கும். அர­சாங்கம்  அதி­வேக  நெடுஞ்­சா­லை­களை அமைப்­ப­தற்­காக  செல­வி­டப்­படும் நிதியில்  ஒரு வீதத்­தை­யேனும்    பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை­க­ளுக்­காக  செல­விட்டால்  போக்­கு­வ­ரத்து   நெரி­சலை  பெரு­ம­ளவில்  குறைத்­துக்­கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்கும்.

போக்­கு­வ­ரத்து  தொடர்­பி­லான  தேசிய  வேலைத்­திட்­டத்தின்  ஒரு  அங்­க­மாக  போக்­கு­வ­ரத்து  அமைச்சின்  உத­வி­யுடன்  பாணந்­துறை  நகரை  போக்­கு­வ­ரத்து  மத்­திய நிலை­ய­மாக  தெரிவு  செய்­துள்ளோம். இதே­வேளை   புகையிரதத்  திணைக்களத்தின் உதவியுடன்  , புகையிரத  சேவையை  நவீனமயப்படுத்தும்  வேலைத்திட்டத்திற்கு  அமைய  பாணந்துறையிலிருந்து   களுத்துறை  வரையில்  அந்த  வேலைத்திட்டங்கள்  இடம்  பெறவுள்ளன.  கட்டுப்பெத்தையில்  இலகுவான  புகையிரத  சேவைக்கான  மத்திய நிலையத்தை  அமைக்கவும் தீர்மானித்துள்ளோம்.