தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியிலிருந்து இன்று காலை குறித்த வாகன பவனி ஆரம்பமானது.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணியாளர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வாகன பவனியில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின்கீழ் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜுலை மாதம் 1ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிர்ப்பணர்வு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

