தமிழகத்தில் முதல் முறையாக காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 8 ஆயிரத்து 468.11 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்று பலமாக வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் சராசரியாக 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

