மும்பை விமான நிலைய பார்சல் பிரிவில் ரூ.10 கோடியே 56 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்சல் பிரிவிற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.