காரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

247 0

கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த காரினையும் அதன் ஓட்டுனரையையும் ஹட்டன் அதிவேக போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பொதிகள் சேவையில் ஈடுபடும் குறித்த நபர் கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பொதியினை ஏற்றிகொண்டு சென்றிருந்த வேலையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் சேவையில் இருந்த அதிவேக போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறித்த காரினை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும் காரினை நிறுத்தாமால் ஹட்டன் பகுதியை நோக்கி கார் விரைந்து பயணித்தது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டு ஹட்டன் காமினிபுர பகுதியில் வைத்து பொலிஸார் காரினை மடக்கி பிடித்துள்ளனர்.

இதன்போது காரினை சோதனையிட்டபோது காரில் ஒரு தொகை ஹெரோயின் போதை பொருள் வைத்து இருந்தமை, பொலிஸாரின் சேவைக்கு இடையுறு விளைவித்தமை போன்ற குற்றச்சாற்றில் குறித்த சாரதி கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியை 28 வயதுடையவர் என வட்டவலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது