கோட்டா களமிறக்கப்பட்டால் ஐ.தே.க.வு.க்கே வெற்றி !-மங்கள

412 0

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் இலகு வாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என் பது தொடர்பில் உடனடியாக அறிவிக்கமாட்டோம்.” என தெரிவித்தார் அமைச்சர் மங்கள சமரவீர.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவே என்பது உறுதியான விடயம் எனத் தெரிவித்த பொது எதிரணியின் நாடளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவரைக் களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

“ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள். நாட்டின் நலனையும் மூவின மக்களது ஒற்றுமையையும் விரும்புகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.