யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி

334 0

மிஹிந்தலை பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) காலை 6.30 மணியளவில் மீன்பிடிக்க சென்ற போது குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெவ பகுதியை சேர்ந்த தயான் எனும் 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானை தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.