பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி – பிரதமர் களமிறக்கப்படுவார்கள்!

352 0

பொதுஜன பெரமுன   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன்  கூட்டணி அமைத்துத்துத்தான உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. பொதுஜன பெரமுனவின் சார்பிலே  ஜனாதிபதி, மற்றும் பிரதமர் களமிறக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்  காமினி லொகுகே தெரிவித்தார்.

 

பரந்துப்பட்ட கூட்டணிமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்  பெற்று வருகின்றது. பேச்சுவார்த்தைகளில் சுதந்திர கட்சியினர்  இணக்கமாக  செயற்பட்டு விட்டு பொது இடங்களிலும், ஊடகங்களிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களையே    குறிப்பிடுகின்றார்கள்.

கூட்டணி விவகாரத்தில் இவர்கள் முழு  ஒத்துழைப்புடன் செயற்படவில்லை.

இரு  தலைவர்களின் அரசியல் நோக்கங்களையும் நிறைவேற்றவே நாம்  கூட்டணி  அமைப்பதற்கு ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்தோம் ஆனால்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டுள்ள  கருத்துக்கள் அவர்களின் அரசியல்  எதிர்பார்ப்புக்களை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஒருபோதும்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  இணைய போவதில்லை  என்று குறிப்பிட்டுள்ளமை  எவ்விதத்திலும் பொதுஜன பெரமுனவிற்கு பாதிப்பினை  ஏற்படுத்தாது.

சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணி அமைத்துத்தான்  உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிப் பெற வேண்டும்  என்ற தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.