முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ். ஆயரால் திறந்து வைப்பு !

359 0

போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது .யாழ் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய  ஜஸ்டின் B . ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது .

இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த திறப்புவிழா நடைபெற்றது .ஆலயம் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து விசேட திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயரால் ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகையால் ஒப்புக்கொடுக்கப்பட்டது . இந்த திறப்புவிழா நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , கரைதுறைப்பற்று   செயலர் , கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .