கனடாவில் இனவெறி தாக்குதல்: ஒருவர் பலி- 3 பேர் காயம்

309 0

201610171104488835_racist-attack-in-canada-one-death-3-injured_secvpfகனடாவில் நடந்த இன வெறி தாக்குதலில் சீக்கியரின் ஓட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

கனடாவில் அல்பெர்டா மாகாணத்தில் திவானா என்ற சீக்கியர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஓட்டல் உள் ளது. நேற்று இரவு இந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது.தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர் உடல் கருகி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.இது குறித்து ராயல் கன்டியன்,மவுன்டட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இனவெறி காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.