கெப் – மோர்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் மூவர் பலி

323 0

சிலாபம் – ஆனமடுவ வீதியில் நாகவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வாகனம் ஒன்றும் மோர்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இவ்விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேரும் பலத்த காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட அடிகம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கெப் வாகனம் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல்லம பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.