இளைஞனிடமிருந்து ஹெரோயின் மீட்பு

279 0

வவுனியா கற்குழிப்பகுதியில இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதை ஒழிப்புப்பிரிவினர்   மேற்கொண்ட நடவடிக்கையின்போது கற்குழிப்பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 23வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.