ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிப்போம் – ஐ.தே.க

289 0

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அடுத்தவாரம் கூடும் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர் ரிஷாத்திடம் கட்சி விசாரணை நடத்தும். குறிப்பாக இராணுவ தளபதி கூறிய விடயங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.