குளவி கொட்டுக்கிலக்காகி 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

366 0

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் இன்று முற்பகல் 12 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மரம் ஒன்றிலிருந்த குளவி  கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 6 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.