சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு!

314 0

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான அசாதாரண நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது..