தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமாம்- மஸ்தான்

306 0

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் அரசாங்கம் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில்) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எவ்வாறான சலுகைகளும் வழங்கப்படாது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. பயங்கரவாதிகள் குறித்து 2 வருடங்களுக்கு முன்பாகவே கூறப்பட்டது. இவை குறித்து அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. இந்த விடயங்களை நாம் சீர் செய்ய வேண்டும்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை அனைத்துத் தலைவர்களும் முன்னுதாரமாக கருதவேண்டும். ஏனெனில், இத்தனை சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் எந்தவித கலவரமும் ஏற்படாது மக்களை அவரே தெளிவுபடுத்தியிருந்தார்” என்றும் மேலும் தெரிவித்தார்.