போலி வணிக வளாகமொன்று சுற்றிவளைப்பு; முத்திரைகள், சான்றிதழ்கள் மீட்பு!

325 0

பண்டாரவளை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வணிக வளாகமொன்று சுற்றிவளைக்கப்பட்டதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கிருந்து பிறப்பு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள்,  இறப்பர் முத்திரைகள் சில போன்றன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த வணிக நிலையத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இருவரும் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.