தமிழீழ போராட்டமும் தீவிரவாதமும் வேறு என்பதை மஹிந்த உணர்ந்துள்ளார்- செல்வம் எம்.பி.

466 0

தமிழீழத்திற்கான எமது போராட்டமும், தீவிரவாதமும் வேறு என்பதை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துக் கொண்டுள்ளார்.

இதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று  நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தினை தங்களுடைய சமூகத்திலிருந்து பிரித்து பார்க்கின்ற வகையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.