கடிதத்தில் என்ன இருந்தது?-லக்ஷ்மன் கிரியெல்ல

306 0

ஜனாதிபதிக்கு சேறு பூசும் நோக்கத்திலோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகளிலோ எனது செயலணி உறுப்பினர்களினால் கடிதங்கள் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பொய்யான விமர்சனங்களை முன்வைக்க முன்னர் கடிதத்தில் என்ன உள்ளது என்பது முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் செயலணி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூவரின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக 639 கடிதங்கள் பரிமாற்றப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.