அவிசாவளையில் பெற்றோல் குண்டுகள் மீட்பு

346 0

அவிசாவளை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது பொற்றோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

அவிசாவளை கொட்டியாகும்புரப் பகுதியிலேயே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே பெற்றோல் குண்டுகளும், வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அவிசாவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.