பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி!

382 0

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தான் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டார் என்ற செய்தியை மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சந்தேக நபர்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கலந்துகொண்டுள்ள கூட்டம் ஒன்றில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதின் பங்கேற்றிருக்கும் ஒளிப்படம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன.