தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் – மதுரை

4970 0

13528677_1351264891557633_9182399093185830758_nஐ.நா சித்ரவதைக்கு எதிரான நாளான 26 ஜுன் 2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் மதுரை, செல்லூர் 60 அடி சாலையில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டம் பறை இசையுடன் தொடங்கியது. நிகழ்வில் தோழர். அரங்க குணசேகரன் தலைவர் – தமிழக மக்கள் முன்னணி , தோழர். பரிதி தமிழ் தமிழர் இயக்கம், தோழர் கிட்டு ராசா த.பெ.தி.க , மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் மற்றும் தோழர் அருள்முருகன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர். நாகராஜ் நன்றி தெரிவித்தார். மதுரையில் உள்ள பல்வேறு தோழமை இயக்க தோழர்கள் இணைந்து நினைவு சுடர் ஏற்றினர். அத்துடன் மாவீரன் முத்துக்குமார், இசைப்பிரியா & பாலச்சந்திரனின் புகைப்படத்திற்கு தோழர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழதில் இனப்படுகொலை ஆனவர்களை நினைவேந்தி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜுன் 26 நினைவேந்தல் கூட்டம் மதுரையில் மே பதினேழு இயக்கம் நடத்தியுள்ளது.

13439045_1351265014890954_1166729235313455450_n 13501568_1352105408140248_6555424838869857791_n 13501918_1351265194890936_7563795387236665281_n 13501941_1351265064890949_3476515679841395580_n 13507001_1352105404806915_7712206091006629067_n 13515166_1242156962469646_1975626238_n 13515253_1242156959136313_862356987_n 13530234_1242156972469645_189715107_n 13530555_1242157002469642_255582666_n 13530577_1242156949136314_753924485_n 13530801_1242156989136310_915790580_n 13535803_1242156952469647_1519714006_n 13552744_1242157005802975_1709279853_n 13553404_1242156969136312_1204935412_n

Leave a comment