வடமாகாண மக்களது நலன்புரிகளிற்கென ஒதுக்கப்பட்ட நிதி பௌத்த மாநாட்டிற்கு ..!

199 0

வடமாகாண சுரேன் இராகவன் தனது தெற்கு செல்வாக்கை வளப்படுத்த வவுனியாவில் ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தி முடித்த பௌத்த மாநாட்டிற்கு 09 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வடமாகாண மக்களது நலன்புரிகளிற்கென ஒதுக்கப்பட்ட நிதியே ஆளுநர் அலுவலகத்தால் பௌத்த மாநாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாள் தங்கி செலவிடும் பணத்தில் ஏழை குடும்பத்தை ஆறு மாத காலத்திற்கு வாழ வைக்கலாம் என அவர் அண்மையில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் விமர்ச்சித்திருந்தார்.அவ்வாறாயின் தற்போது பௌத்த மாநாட்டிற்கென செலவிடப்பட்ட 09 இலட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கு எத்தனை மாதத்திற்கு அந்த ஏழை குடும்பத்தை வாழ வைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.