வைத்தியசாலையின் வெற்றிடங்களுக்கு தகுதியானர்வர்களை நியமிக்க வேண்டும்-சிவமோகன்

214 0

வடக்கில் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் சபையில் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

வடக்கின் வைத்தியசாலைகளில் உரிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கு வந்து சேவை புரிய வைத்தியர்கள் விரும்புவதில்லை. வடக்கின் வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதற்கு  வைத்தியர்கள் புறக்கணிக்கின்றனர். 

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குக்கு தேவையான, வெற்றிடமாக உள்ள வைத்தியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அத்துடன் மாவட்ட வைத்தியசாலைகளை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய உயர்த்த வேண்டும் என்றார்.