யாழில் கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது

439 0

யாழ். செம்மணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (17) இரவு 3 பேரும் 10 கிலோ கேரளா கஞ்சாவை கைமாற்றவதற்கு வருகை தந்திருந்த போதே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், 3 பேரையும் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.