இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி

325 0

deathகிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்து 22 வயதுடைய கனகராசா கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.