மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் கட்டுத்துப்பாக்கியில் சிக்கி பலி

220 0

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் கட்டுத்துப்பாக்கியில் சிக்கி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வவுனிக்குளம் அலைகரை காட்டுப்பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில்  இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

மாந்தை கிழக்கு வவுனிக்குளம் அம்பாள்புரம் பகுதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது 34) தனது வீடடிற்குப்பின்புறமாகவுள்ள வவுனிக்குளம் பகுதியில் துண்டலில் மீன்பிடிப்பதற்காக சென்ற சமயம் அப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்தலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, வெடிச்சத்தம்கேட்டபகுதிக்கு சென்ற கிராம வாசிகள் குறித்த நபர் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருப்பதை அயலவர்களின் உதவியுடன் உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர், ஏற்கனவே உயரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிசெய்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதுடன இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவிப்பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.