யாழ் நீதி­மன்­றில் குற்றவாளி ,பொலிஸார் என்னை சித்திரவதை செய்தனர் என வாக்குமூலம்

292 0

திருட்­டுக் குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வர் தன்­னைப் பொலி­ஸார் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­னர் என யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார்.

கொக்­கு­வி­லில் உள்ள வீடொன்றை உடைத்து திரு­டப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பாக 3 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

இது தொடர்­பாக விசா­ர­ணை­கள் நடை­பெற்று வந்­தன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

வழக்­கின் சாட்­சி­யாக முறைப்­பாட்­டைப் பதிவு செய்த மற்­றும் சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்ய உத­விய பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரி­டம் சாட்­சி­யம் பெறப்­பட்­டது.

அதன்­பின்­னர் சாட்­சி­யத்­தில் குறுக்கு விசா­ர­ணை­கள் உள்­ள­னவா? என்று சந்­தே­க­ந­பர்­க­ளி­டம் மன்று வின­வி­ய அப்­போது இரண்­டா­வது சந்­தே­க­ந­பர் தன்­னைப் பொலி­ஸார் சித்­தி­ர­வதை செய்­தார்­கள் என்று தெரி­வித்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்­டில் கைது செய்த பொலி­ஸார் கொக்­கு­வி­லில் உள்ள இந்து மயா­னத்­தில் வைத்து “பைப்” ஒன்­றால் தாக்­கிச் சித்­தி­ர­வதை செய்­த­னர். அதன்­பின்­னரே பொலிஸ் நிலை­யம் அழைத்­துச் சென்­ற­னர். அங்கு பொலி­ஸா­ரும், முறைப்­பாட்­டா­ள­ரும் கூடி நின்று எம்மை அடை­யா­ளம் காட்­டி­னர் என்று அவர் தெரி­வித்­தார்.

அவ்­வா­றான சித்­தி­ர­வதை இடம்­பெற்­றதா? என்று வழக்­கில் சாட்­சி­யம் அளித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தி­ரி­டம் மன்று வின­வி­ய போது அவ்­வாறு எது­வும் நடக்­க­வில்லை என்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் தெரி­வித்­தார்.

அதன்­பின்­னர் வழக்கு தொடர் விளக்­கத்­துக்­காக எதிர்­வ­ரும் ஏப்­ரல் மாதம் 29ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.