கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

203 0

மட்டக்களப்பு, தாழங்குடா, மண்முனை பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 44 வயதுடைய எம்.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.