மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

273 0

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று (18) மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜே.ரமீஸ் (வயது-23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி , 2 ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில், மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை பகுதியில் குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞன் பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் குறித்த பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.