மாகாண சபைத்தேர்தல்களை ஜூன் மாத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் – கெஹெலிய

344 0

மாகாணசபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தி ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டினை கைவிட வேண்டும். 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று எதிர்வரும் ஜூன் மாத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு தரப்பினர் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூறும் அதேவேளை, இன்னொரு தரப்பினர் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் எனத் தெரிவித்து வருகின்றமை தொடர்பில் வினவிய போதே  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

Leave a comment